வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த மீன்பிடி தொழிலாளி

வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த மீன்பிடி தொழிலாளி

சடலம் கண்டெடுப்பு 

நித்திரவிளை அருகே வீட்டில் அழுகிய நிலையில் மீன் பிடி தொழிலாளி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே தூத்தூர் துறைவிளாகம் பகுதியை சேர்ந்தவர் திமெத்தியூஸ்.மீன்பிடி தொழிலாளி. இவரது பிள்ளைகள் திரு மணம் ஆகி வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். மனைவி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். திமெத் தியூஸ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் இவரது பிள்ளைகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வீட்டை திறந்து பார்த்த போது திமெத்தியூஸ் அழுகிய நிலையில் கட்டிலில் சடலமாக கிடந்தார். அக்கம் பக்கத்தினர் கடந்த 3ம் தேதிக்கு பிறகு இவரை பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடம் வந்த நித்திரவிளை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story