வேடசந்தூரில் மீன் பிடி திருவிழா

வேடசந்தூரில் மீன் பிடி திருவிழா

மீன்பிடி திருவிழா

வேடசந்தூரில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது.

வேடசந்துார் குராலுாத்து குளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று ஆர்மாக மீன்களை பிடித்து சென்றனர்.முருநெல்லிக்கோட்டை ஊராட்சி கெண்டையகவுண்டனுாரில் 200 க்கு மேல் வீடுகள் உள்ளன.இங்கு குராலுாத்து குளம் உள்ளது.2021ல் ஊர் கவுண்டர் ரங்கநாதன் சார்பில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் வாங்கி குளத்தில் விடப்பட்டது.

2023ல், குளத்திற்கு போதிய தண்ணீர் வராத நிலையில் குளத்தில் தண்ணீர் குறைந்தது. இதனால் மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு எடுக்கப்பட்டு நேற்று காலை, சுற்றுப்பகுதி மக்கள், காலை 6:00 மணி முதலே குளத்தில் குவிந்தனர்.

கன்னிமார் கோயிலில் வழிபாடு முடிந்ததும் மீன்பிடி திருவிழா தொடங்கியது. பொது மக்கள் ஏராளமானோர் குளத்தில் இறங்கி ஆர்வமாக பல வகையான மீன்களை பிடித்து சென்றனர்.

Tags

Next Story