பொன்னமராவதி அருகே மீன்பிடித் திருவிழா!

பொன்னமராவதி அருகே மீன்பிடித் திருவிழா!

மீன்பிடித் திருவிழா 

பொன்னமராவதி அருகே மீன்பிடித் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கோனாங் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பொன்னமராவதி வட்டாரத்தில் கோடைகாலத்தில், விவசாய கண்மாய்களில் நீர் மட்டம் குறைந்த நிலையில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி மீன்பிடித்திருவிழா நடைபெறும். அதன்படி மைலாப்பூர் கோனாங் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் வலை, ஊத்தா, பரி, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய சுற்றுவட்டார கிராம மக்கள் கெண்டை, கெளுத்தி, அயிரை, விரால் உள்ளிட்ட பல்வேறு மீன்களை ஆர்வமுடன் பிடித்துச்சென்றனர்.

Tags

Next Story