மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் : 600 விசைப்படகுகள் நிறுத்தம்!

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் : 600 விசைப்படகுகள் நிறுத்தம்!

விசைப்படகுகள் நிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக மீன்வளத்துறை சாா்பில் ஆண்டுதோறும் மீன்களின் இனவிருத்திக்காக தமிழக கடலோரப் பகுதிகளில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை 60 நாள்கள் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, தருவைக்குளம், வேம்பாா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த சுமாா் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மீனவா்கள் கூறியது: மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை பழுது பாா்க்க உள்ளோம். இந்த 60 நாள்களில் தொழில் இல்லாததால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, தோ்தலை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு மீனவா்களுக்கான தடைக்கால நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். மேலும்,ங தமிழக கடற்கரை பகுதிகளில் கேரளம் மற்றும் பிற மாநில மீனவா்கள் வந்து மீன்பிடிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags

Next Story