மீன்பிடி தடைக்காலம்- கருவாடு தொழில் பாதிப்பு

மீன்பிடி தடைக்காலம்- கருவாடு தொழில் பாதிப்பு

மீன்பிடி தடைக்காலம் மற்றும் மழை எதிரொலியால் கருவாடு தொழில் பாதிப்படைந்துள்ளது.


மீன்பிடி தடைக்காலம் மற்றும் மழை எதிரொலியால் கருவாடு தொழில் பாதிப்படைந்துள்ளது.

மீன்பிடி தடைக்காலம் மற்றும் மழை எதிரொலியாக கருவாடு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகு மீனவர்களும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகு மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த படகுகளில் தினமும் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்ற வற்றை உடனடியாக விற்பனை செய்தும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகின்றனர். இதில் கழிவாகக் கூடிய மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காயவைத்து கருவாடு விற்பனை தொழிலும் செய்து வருகின்றனர். உணவிற்கு பயன்படும் கருவாடுகளை விட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இவ்வகை மீன்களை மொத்தமாக வாங்கி கிலோ 10 ரூபாய் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது. மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம் பிரிக்க, காயவைக்க, சாக்கு மூட்டைகளில் கட்டி ஏற்றுவதற்கு என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மூலம் கருவாட்டிற்கு கிடைக்கும் மீன்கள் கிடைக்கவில்லை. நாட்டுப்படகு கருவாடு மூலம் கிடைக்கும் மீன்களை கொண்டு செய்துவந்த தொழிலும் கடந்த 4 நாட்களாக இந்த பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெயில் இன்றி கருவாடு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் வேலை செய்து வந்த 1000-க்கும் மேற்பட்ட ம தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

Tags

Next Story