குமரி மேற்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்
மீன்பிடிதடைக்காலம்
தேங்காய்பட்டணம்,கொல்லங்கோடு உட்பட குமரி மேற்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், முட்டம் ,தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மேற்கு கடற்கரை அரபிக்கடல் பகுதிகளான கேரளா , குஜராத் கடல் பகுதியில் சுமார் 7-நாட்கள் முதல் 15-நாட்கள் வரை நடுக்கடல் பகுதியில் தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு மேற்கு கடற்கரை அரபிக்கடல் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 60-நாட்கள் மீன்பிடி தடை விதிக்கப்படுகிறது.இந்த வருட 60-நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் அவை தேங்காய் பட்டணம் முட்டம் உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எஞ்சிய படகுகள் கரை திரும்பி வருகிறது.

Tags

Next Story