தெரு நாய்கள் கடித்து ஐந்து ஆடுகள் உயிரிழப்பு !

தெரு நாய்கள் கடித்து ஐந்து ஆடுகள் உயிரிழப்பு !

ஆடுகள் உயிரிழப்பு

தெரு நாய்கள் கடித்து ஐந்து ஆடுகள் உயிரிழந்தன.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் சிவாஜி தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகி றார். வழக்கம் போல் நேற்று முன்தினம் ஆடு களை மேய்த்து விட்டு மீண்டும் வீட்டிற்கு அருகில் உள்ள தனது பட்டியில் ஆடுகளை அடைத்துள்ளார். நேற்று திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுசிவாஜி ஓடிப்போய் ஆடுகள் கட்டியிருந்த பட்டியை பார்த்துள்ளார். அப்போது தெரு நாய்கள் சுற்றி வந்து ஆடுகளை கடித்து குதறி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நாய்களை விரட்டிவிட்டு பட்டியில் பார்த்தபோது அங்கு 5 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும் 4 ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இது குறித்து ராமசாமி அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

மேலும் கால்நடை டாக்டர்கள், படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அரும்பாவூர் பகுதியில் தொடர்ந்து தெருநாய்க ன் அட்டகாசம் அதிகரித்து வருவதால் நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

Tags

Next Story