கனமழைக்கு ஐந்து வீடுகள் சேதம்

ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலத்தில் கனமழைக்கு ஐந்து வீடுகள் சேதமாகின.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வரும் நிலையில், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் மழைக்கு ஐந்து வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, கூடலூர் பகுதியை சேர்ந்த மீனாட்சி,அரியாகோட்டை பகுதியை சேர்ந்த சரஸ்வதி,ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியைச் சேர்ந்த பாக்கியம், ஆனந்தூர் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் ஆகியோரில் ஓட்டு வீடுகளும்,கீழச்சேந்தனந்தல் பகுதியை சேர்ந்த இந்திராவின் ஆஸ்பிட்டால் வீடும் மரம் சாய்ந்து விழுந்ததில் சேதமடைந்தது.மழைக்கு சேதமடைந்த வீடுகளை ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சுவாமிநாதன் நேரில் பார்வையிட்டு, அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கினார்.உடன் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்களும்,வருவாய்த் துறையினரும் இருந்தனர்.

Tags

Next Story