கொலை முயற்சி வழக்கு – ஐந்து பேர் கைது

கொலை முயற்சி வழக்கு – ஐந்து பேர் கைது

கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்கில் 5 பேரை கைது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைசங்கர் (26). இவரது வீடு புகுந்து கோட்டார் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த குமார், ஐயப்பன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் கோட்டார் போலீசில் கலைசங்கர் புகார் செய்தார். புகாரின் பேரில் குமார், ஐயப்பன் மீது கொலை முயற்சி உட்பட ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதே போல் குமார் கோட்டார் போலீசில் அளித்த புகாரில், இந்து கல்லூரி, அனாதை மடம் பகுதியில் தனது நண்பர் ஐயப்பனுடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த கலை சங்கர், ராதாகிருஷ்ணன், பேச்சியப்பன் ஆகியோர் அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் கலைசங்கர், ராதாகிருஷ்ணன், பேச்சியப்பன் ஆகிய மூன்று பேர் மீதும் கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கைதான குமார் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story