மூக்கனூரில் சூதாடிய ஐந்து பேர் கைது
![மூக்கனூரில் சூதாடிய ஐந்து பேர் கைது மூக்கனூரில் சூதாடிய ஐந்து பேர் கைது](https://king24x7.com/h-upload/2024/04/04/464843-police-station.webp)
காவல்துறை விசாரணை
மதிகோன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூக்கனூர் பகுதியில் சூதாடிய ஐந்து நபர்கள் கைது மேலும் இரு சக்கர வாகனங்கள்,பணம் பறிமுதல்.
தர்மபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மாரப்பன் மற்றும் காவலர்கள் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணியிடப்பட்ட போது அப்பகுதியில் சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டிருப் பதாக தெரியவந்தது. இதனை அடுத்து அங்கு சூதாடி கொண்டிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், அசோக்,ஆனந்த், வெங்கடேசன்,முருகன், விமல்ராஜ், என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் ஐந்து நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் அவருடன் இருந்து 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1050 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story