ஈசநத்தம் மயானம் அருகே சூதாடிய ஐந்து பேர் கைது

ஈசநத்தம் மயானம் அருகே பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது

. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈசநத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நவம்பர் 5ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஈசநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் திருநாவுக்கரசு. அப்போது, அருகில் உள்ள மயானம் அருகே பணம் வைத்து சூதாடுவது தெரிந்தது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈசநத்தம் புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சேர்வைக்காரன் பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன், குஜிலியம்பாறை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, டி. கூடலூர் பகுதியைச் சேர்ந்த செல்வ பொன்ராஜ், தாராபுரம் காளிபாளையத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் 35 ஆகிய ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறையினர், சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ. 250-யும் பறிமுதல் செய்தனர். ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர்,அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story