கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனை செய்த ஐந்து பேர் கைது

கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனை செய்த ஐந்து பேர் கைது

திருத்தணி அருகே கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்து 30 லிட்டர் சாராயம் போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருத்தணி அருகே கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்து 30 லிட்டர் சாராயம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருத்தணி அருகே கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்து 30 லிட்டர் சாராயம் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்வதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் ரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் ஆர்கே பேட்டை கலால் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் திருத்தணி , ஆர்கே பேட்டை,கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டதில் நல்லாடூர் காலனி சேர்ந்த கன்னியம்மாள்(58) வினிதா(48) தமிழ் அழகன்(24) நெமிலி காலனி சேர்ந்த ரோஜா(27) நல்லாடூர காலனி சார்ந்த ஏகாத்தா(45) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் திருத்தணி ஒன்றியம் சூரியநகரம் அருகே ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story