மதுராந்தகம் அருகே ஐந்து வாகனங்கள் மோதி விபத்து
மதுராந்தகம் அருகே ஐந்து வாகனங்கள் மோதி விபத்துககுள்ளனது.
வாரத்தின் முதல் நாள் என்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி அதிகப்படியான வாகனங்கள் செல்வது வழக்கம் இந்த நிலையில் இன்று விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் ஐந்து கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இந்த போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Tags
Next Story