மின்னணு வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

மின்னணு வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (10.04.2024) பார்வையிட்டார்.

உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.க.ந.கோகுலப்பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story