சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் கொடியேற்றம்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் கொடியேற்றம்
சுசீந்திரம் கோவிலில் திருக்கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய நான்கு மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களுக்கு பின்னர் கோவில் பூசாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்து கொடியை ஏற்றினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இன்று தொடங்கிய இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் திருமுறைபாராயணம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தேவார இன்னிசை, சாமி வாகனத்தில் பவனி வருதல் போன்றவையும், ஒன்பதாவது நாள் திருவிழாவான 16ஆம் தேதி தேரோட்டமும் அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண நிகழ்சியும் நடைபெறுகிறது.

விழாவின் நிறைவு நாளான 17ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து, தெப்பத் திருவிழா நடைபெறும். அன்று நள்ளிரவே ஆராட்டு நிகழ்ச்சியோடு பத்து நாள் சித்திரை தெப்பத் திருவிழா நடைபெறும்.

Tags

Read MoreRead Less
Next Story