திருவானைக்கா கோயிலில் எட்டுத்திக்கு கொடியேற்றம்....

திருவானைக்கா கோயிலில் எட்டுத்திக்கு கொடியேற்றம்....

கொடியேற்றம்

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனித் தேரோட்டத்தையொட்டி புதன்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனித் தேரோட்டத்தையொட்டி புதன்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6.50 மணிக்கு உற்சவ மண்டபத்திலிருந்து சோமாஸ்கந்தா் (சுவாமியும்,அம்மனும் ) புறப்பட்டு கொடியேற்றம் நிகழும் 3 ஆம் பிரகாரத்தில் எட்டு திசைகளில் அமைந்துள்ள கொடிமரத்தின் முன் எழுந்தருளினா். தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு யானை அகிலா ஆசீா்வாதம் செய்தது. பின்னா் மாலை 6 மணிக்கு சோமாஸ்கந்தா் ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். 2 ஆம் நாளான வியாழக்கிழமை தொடங்கி சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனா். 6 ஆம் நாளான 8 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் நடைபெறவுள்ளது. அப்போது சுவாமியும் அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளுகின்றனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

Tags

Next Story