திருவரங்குளம் சிவன் கோயிலில் கொடியேற்றம்

திருவரங்குளம் சிவன் கோயிலில் கொடியேற்றம்

திருவரங்குளம் சிவன் கோயிலில் கொடியேற்றம்

திருவரங்குளத்தில் அரங்குளநாதர் கோயிலில் திருவிழாவிற்கான கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் மேளதாளத்துடன் ஊர்வலமாக தேரோடும் நான்கு வீதிகளிலும் வலம் வந்தது.

நிகழ்ச்சியில் கோவில் மேற்பார்வையாளர் தட்சிணா மூர்த்தி மற்றும் பணியாளர்கள், மண்டக படிதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்பாள் இரட்டை தேரோட்டம் வரும் 21ம் தேதி காலை நடக்கிறது. 22ம் தேதி இரவு 8 மணிக்கு கோயில் தெப்பக்குளத்தில் தெப்போற்ஸவம் நடக்கிறது.

Tags

Next Story