மத்தூர் அருகே விவசாயிகள் கிளைச் சங்கத்தின் கொடியேற்று விழா

மத்தூர் அருகே விவசாயிகள் கிளைச் சங்கத்தின் கொடியேற்று விழா

மத்தூர் அருகே விவசாயிகள் கிளைச் சங்கத்தின் கொடியேற்று விழா

மத்தூர் அருகே விவசாயிகள் கிளைச் சங்கத்தின் கொடியேற்று விழா நடைபெற்றது.

விவசாயிகள் கிளைச் சங்கத்தின் கொடியேற்று விழா, கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்னஆலோரஹள்ளி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கிளைச் சங்கத்தின் கொடியேற்று விழா, சங்கதத்தின் நிறுவனர் அய்யா நாரயணசாமின் 99 வது பிறந்த தின விழா நடைப்பெற்றது.

மாவட்ட நர்சரி உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணையா தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு கிளைச்சங்கத் தலைவர் சம்பத், துணைத் தலைவர் செல்வம், கிளைச் செயலாளர் சிவா, மாவட்ட துணைச் செயலாளர் வரதராசன், மாவட்ட மகளீர் அணித்தலைவி பெருமாகாசி, மன்றத்தின் சட்ட ஆலோசகர் நஷீர் அகமத், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், இளைஞர் அணி துணைச் செயலாளர் அனுமந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் இராமகவுண்டர் கலந்துக் கொண்டு கிளைச் சங்கத்தின் கொடியனையும் ஏற்றி வைத்து சங்கத்தின் நிறுவனர் ஐயா நாரயணசாமின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார்.

Tags

Next Story