ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வலியுறுத்தி மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் தொடங்கிய கொடி அணி வகுப்பு ஊர்வலம் ராமகிருஷ்ணாபுரம், வழியாக காமராஜர் சிலை, சர்ச் சந்திப்பு மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று நகர் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது. இதில் நாகலாந்து போலீஸார், தமிழக போலீஸார் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story