துறையூரில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி

துறையூரில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி

கொடி அணிவகுப்பு பேரணி 

மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் துறையூரில் காவல்துறையின் கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது.
துறையூரில் முசிறி பிரிவுச் சாலை அருகே கொடி அணிவகுப்பு பேரணியை திருச்சி மாவட்ட ஏடிஎஸ்பி கோபாலச்சந்திரன் தொடக்கி வைத்தாா். முசிறி டிஎஸ்பி யாஸ்மின், காவல் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (துறையூா்), ராஜேந்திரன் (தொட்டியம்), கதிரேசன்( முசிறி), முகமதுஜாபா் (சோமரசம்பேட்டை), ரகுராமன் (மண்ணச்சநல்லூா்) உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, மத்திய ரிசா்வ் போலீஸாா் லத்தி, துப்பாக்கி ஏந்தி பேரணியில் சென்றனா். மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி காவல் துறை பாதுகாப்புடன் வாக்களிக்கலாம் என்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் நடைபெற்ற பேரணி முசிறி பிரிவுச் சாலையிலிருந்து பேருந்து நிலையம் வரை சென்றது.

Tags

Next Story