காவல்துறை கொடி அணிவகுப்பு

காவல்துறை கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

அரவக்குறிச்சியில் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக துணை ராணுவத்தினர், காவல் துறையினர் இணைந்து நடத்திய கொடிய அணிவகுப்பு நிகழ்ச்சி சௌந்தராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கியது. இந்த நிகழ்ச்சியில ஏ டி எஸ் பி பிரேம் ஆனந்த், டிஎஸ்பி அப்துல் ரஷீத் தலைமையில் நடைபெற்றது . இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிகள் ஏந்திய துணை ராணுவத்தினர், இருபால் காவல்துறையினர் என சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பள்ளப்பட்டி ஷா நகர் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக சென்று, பொதுமக்களிடையே வாக்களிக்கும் போது ஏற்படும் அச்ச உணர்வை போக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

Tags

Next Story