வெள்ள நிவாரண நிதி; ஒரு மாத ஊதியத்தை அளித்த அதிமுக கவுன்சிலர்கள்

திருப்பூரில் வெள்ளநிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை அதிமுக கவுன்சிலர்கள் அளித்தனர்.
வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை மேயரிடம் கொடுத்த கவுன்சிலர்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் பலரும் நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கி வருகிறார்கள். அதன்படி அ.தி.மு.க. எதிர்கட்சி குழு தலைவரும், கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தலைமையில், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 18 பேரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதிக்காக மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினர்.

Tags

Next Story