மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சார்பில் வெள்ள நிவாரணம்

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சார்பில் வெள்ள நிவாரணம்
 வெள்ள நிவாரண நிதி வழங்கல்
செங்கல்பட்டு அடுத்த ஈச்சங்கரணை கிராமத்தில், மகரிஷி வித்யா மந்திர் அவிக்னா -செலஸ்ட் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி சார்பில், மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருக்கு, பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இதையேற்று, 50,000 ரூபாய் நிதி சேர்க்கப்பட்டது. அதன்பின், நிவாரண தொகை 50,000 ரூபாயை, பள்ளி தாளாளர் டாக்டர் உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர் டாக்டர் பத்மா ரகுநாதன் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர், கலெக்டர் ராகுல்நாத்திடம் நேற்று வழங்கினர். மேலும், நிவாரண பணிகளில் பங்களிப்போம். மாணவர்களிடையே நற்பண்புகளை வளர்ப்போம் என, மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story