முத்தாயம்மாள் நிறுவனத்தின் ரூ.10 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண பொருட்கள்

முத்தாயம்மாள் நிறுவனத்தின் ரூ.10 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண பொருட்கள்

ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் சார்பில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள், வியாழக்கிழமை அன்று, தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனரக வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசன், முத்தாயம்மாள் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகள் ஆகியவை இணைந்து ஆடவர் மற்றும் மகளிருக்கான அத்தியாவசிய உடைகள், பாய் மற்றும் போர்வைகள் ஆகியவற்றை நிவாரண பொருட்களாக வழங்கின.

இந்நிகழ்ச்சியில் வநேத்ரா குழுமத்தின் செயலாளரும், திராவிட முன்னேற்றக் கழக மாநில அயலக அணி துணை செயலாளருமான இரா.முத்துவேல், வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் வநேத்ரா முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூசனின் இயக்குநர்-கல்வி, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன் மற்றும் கல்வியியல், கல்லூரிகளின் முதல்வர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனா்

Tags

Next Story