வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்: 3 சக்கர வாகனத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்: 3 சக்கர வாகனத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி

3 சக்கர வாகனத்தை வழங்கிய மாற்றுத்திறனாளி

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு 3 சக்கர வாகனத்தை மாற்றுத் திறனாளி வழங்கினார்.

தூத்துக்குடியில் மழைவெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத் திறனாளிக்கு தன்னுடைய 3 சக்கர வாகனத்தை வழங்குமாறு மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி, நேதாஜி ஆம்புலன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

தூத்துக்குடியில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவு உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி 'மாற்றம் தேடி' பாலமுருகன், தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தனது 3 சக்கர சைக்கிளை வழங்க முன்வந்துள்ளார்.

இந்த வாகனத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகில் உள்ள நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளரும் சமூக ஆர்வலருமான ஹரிகிருஷ்ணனிடம் பாலமுருகன் ஒப்படைத்தார். அந்த வாகனம் விரைவில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Tags

Next Story