வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ள அபாய எச்சரிக்கை

திண்டுக்கல்லில் வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பேரணை உள்ளது. தொடர் மழை காரணமாக, வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இத்துடன் மருதா நதி, மஞ்சளாறு ஆகிய நதிகளில் இருந்து வரும் நீரும் திண்டுக்கல் மாவட்ட பகுதியில் செல்லும் வைகை ஆற்றில் கலந்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இவை அனைத்தும் சேர்ந்து, அணைப்பட்டி பேரணை பகுதியில் 8,000 கன அடியாக வைகை ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம், நடகோட்டை, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கண்ணாபட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story