வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யும் நிலையில், குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யும் நிலையில், குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குடகனாற்றுக்கு மேற்கு தொடர்ச்சி மலை தாண்டிக்குடி ,ஆடலூர், பன்றி மலையில் பெய்யும் மழை நீர் வருகிறது. இது ஆத்தூர் நீர்த்தேக்கம் பகுதியில் சேகரிக்கப்பட்டு, அங்கு மிகுதியாகும் போது குடகனாறாக வெளியேறுகிறது. இங்கிருந்து வேடசந்தூர் அணையில் சேர்கிறது பின்பு அமராவதி ஆற்றில் கலந்து கரூர் மாவட்டம் செல்கிறது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றில் குளிக்கவும் துணி துவைக்கவோ பொதுமக்கள் கூடாது. கரையோரங்களில் எச்சரிக்கையாக வசிக்க வேண்டும். இவ்வாறு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story