தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பேச்சிப்பாறை அணையில் 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையில் 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இந்த மழை காரணமாக நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை வர பகுதிகளில் மழை பெய்து தற்போது பெய்து வரும் கோடைமழை காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4.00 மணிக்கு 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திறந்து விடப்பட்டது.

எனவே ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story