சப்பாத்து பாலத்தில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து தடை நீடிப்பு

சப்பாத்து பாலத்தில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து தடை நீடிப்பு

தொடர் மழை காரணமாக குழித்துறை சப்பாத்து பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக குழித்துறை சப்பாத்து பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மிதமான மற்றும் கன மழை பெய்து வருகிறது இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.தொடரும் மழை மற்றும் உபரி நீர் வெளியேற்றம் காரணமாக கோதையாறு,பரளியாறு தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது குழித்துறை தரைப்பாலம் மூழ்கி செல்வதால் போக்குவரத்து தடை தொடர்ந்து நீடிக்கிறது தாழ்வான பகுதிகளில் இருப்போர் பாதுகாப்பாக இருக்கவும் ஆறுகளில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிக்கப்பட்டு உள்ளது மழை காரணமாக மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல் நீடிக்கிறது மழை காரணமாக சாலைகளில் மழை நீர் ஓடை போல பாய்ந்து செல்கிறது.

Tags

Next Story