வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - வெள்ள அபாய எச்சரிக்கை

வராக நதி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு - வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று பிற்ப்பகல் முதல் இரவு முழுவதும் பெய்த மழை காலையிலும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கல்லாறு, செழும்பாறு, கும்பக்கரை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வராக நதி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

Tags

Next Story