வீடுகளுக்குள் கழிவுநீருடன் புகுந்த வெள்ளம்  

வீடுகளுக்குள் கழிவுநீருடன் புகுந்த வெள்ளம்  

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் 

நாகர்கோவில் அருகே பாறைக்கா மடம் குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் கழிவு நீருடன் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதே போன்று நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பாறைக்கா மடம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாக்கடை ஓடைகள், கால்வாய்களில் சீரமைப்பு பணிகள் செய்யாததே இது போன்ற பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் பாம்பு, பூச்சிகள் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் நுழைந்து விட்டன. எனவே தொற்று வியாதிகளும் இனி பரவும் நிலை ஏற்படும் என இப்பகுதி பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story