முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி - முன்னாள் அமைச்சர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மலர் அஞ்சலி செலுத்தினார்

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அவரது சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை விராலிமலை தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர்.சி விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக ஜெ.ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு தீபாரதனைகள் கட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 500க்கும் மேற்பட்டோருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

Tags

Next Story