மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி

மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி

மாட்டுதாவணி மலர் சந்தை

பூக்களின் வரத்து அதிகரித்திருப்பதால் மதுரை மாட்டுதாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளது.
மதுரை மல்லிகை பூ வழக்கமாக கோடைகாலத்தில் அதிகரிப்பு காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் வருகிறது. தற்போது சுபமுகூர்த்த தினம் எதுவும் இல்லாமல் பூக்களின் தேவை குறைந்துள்ளதால் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை பல மடங்கு குறைந்துள்ளது. மல்லிகை பூ ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், முல்லை பூ 250 ரூபாய்க்கும். செவ்வந்திப் 240 ரூபாய்க்கும், பட்டு ரோஸ் 130 ரூபாய்க்கும், விற்பனையாகிறது. இதனால் பூ விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

Tags

Next Story