மழை காரணமாக பூக்கள் விலை அதிகரிப்பு

தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.

தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக தர்மபுரி,சோலை கொட்டாய்,அதியமான் கோட்டை,நல்லம்பள்ளி, ஏலகிரி,நார்த்தம்பட்டி,சாமிப்செட்டிபட்டி, பெரியாம்பட்டி,மாட்லாம்பட்டி, காரிமங்கலம் , செட்டி கரை,நடுப்பட்டி, ஒடசல்பட்டி, பகுதியில் இருந்து விவசாயிகள் தர்மபுரி பூ மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் குண்டு மல்லி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், சன்னமல்லி ஒரு கிலோ 360 ரூபாய்க்கும்,சம்பங்கி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சாமந்திப்பூ 160 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 100 ரூபாய்க்கும்,செண்டு மல்லி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும். அரளி ஒரு கிலோ 250 ரூபாய்கும், தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையானது வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story