தர்மபுரியில் பூக்கள் விலை அதிகரிப்பு !!

தர்மபுரியில் பூக்கள் விலை அதிகரிப்பு !!

பூக்கள்

தர்மபுரி பேருந்து நிலையம் மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிக்கும் குண்டுமல்லி ஒரு கிலோ 400 ரூபாய் விற்பனை ஆனது.
தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகாளான சோலை கொட்டாய்,அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, ஏலகிரி, நார்த்தம்பட்டி, சாமிசெட்டிபட்டி, பெரியாம்பட்டி,மாட்லாம்பட்டி, காரிமங்கலம்,செட்டிகரை,நடுப்பட்டி, ஒடசல்பட்டி, பகுதியில் இருந்து மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தினம் பூக்களை தருமபுரி பேருந்து நிலைய பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம் அந்த வகையில் இன்று கொண்டு வந்த பூக்கள், குண்டு மல்லி ஒரு கிலோ 400 ரூபாய், சன்னமல்லி ஒரு கிலோ 349 ரூபாய், கனகாம்பரம் ஒரு கிலோ 600 ரூபாய், ஜாதி மல்லி ஒரு கிலோ 400 ரூபாய் சம்பங்கி ஒரு கிலோ 70ரூபாய், சாமந்திப்பூ 240 ரூபாய், பட்டன் ரோஸ் 50 ரூபாய்,செண்டு மல்லி ஒரு கிலோ 80 ரூபாய், அரளி ஒரு கிலோ 60 ரூபாய், தர்மபுரி பேருந்து நிலையம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story