பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

பூக்களின் விலை உயர்வு

திண்டுக்கல் பூ மார்கெட்டில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

முகூர்த்த தினத்தை ஒட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,000ஆக அதிகரித்துள்ளது.

ரூ.800க்கு விற்ற முல்லைப்பூ கிலோ தற்போது ரூ.2,000ஆக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ரூ.400-க்கு விற்ற ஜாதிப்பூ ரூ.1,200க்கும், ரூ.400க்கு விற்ற கனகாம்பரம் தற்போது ரூ.1,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story