தொடர்ந்து பூக்களின் விலை உயர்வு

தொடர்ந்து பூக்களின் விலை உயர்வு

பூக்களின் விலை உயர்வு

பூக்களின் வரத்து குறைந்ததால் திண்டுக்கல் பூ சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்லில் கடந்த கார்த்திகை, மார்கழி மாதங்களில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. மேலும், வரும் ஜன.21, 22 மற்றும் 24 ம் தேதிகளில் தை மாதத்தில் வரும் வளர்பிறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் தொடர்ந்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் நேற்று 3000 க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ சனிக்கிழமை ஆன இன்று காலை 9 மணி அளவில் 4500 முதல் 5000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதேபோல் நேற்று 700க்கு விற்பனையான கனகாம்பரம் 1700 முதல் 2000 வரை விற்பனையாகிறது.

Tags

Next Story