திருப்பூரில் டிரோன்கள் பறக்க தடை

திருப்பூரில் டிரோன்கள் பறக்க தடை

ட்ரோன் பறக்க தடை

அவிநாசி பழங்கரை அருகில் முதலமைச்சர் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதையொட்டி மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வேலூர் கிராமத்தில் நாளைய தினம் திருப்பூர் மற்றும் நீலகிரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ள பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி நாளைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story