தோல் கழிவு நீரால் நுரை பொங்கி ஓடும் பாலாறு!

தோல் கழிவு நீரால் நுரை பொங்கி ஓடும் பாலாறு!

ஆம்பூர் அருகே கனமழையை பயன்படுத்தி தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தோல் கழிவு நீரால் பாலாற்றில் நுரை பொங்கி ஓடுகிறது.


ஆம்பூர் அருகே கனமழையை பயன்படுத்தி தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தோல் கழிவு நீரால் பாலாற்றில் நுரை பொங்கி ஓடுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கனமழையை பயன்படுத்தி தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தோல் கழிவு நீரால் நுரை பொங்கி ஓடும் பாலாறு! பாலாற்றில் தோல் கழிவுநீரை கலப்பதை தடுக்க பலமுறை புகார் அளித்தும் கண்டும் காணாமல் அதிகாரிகள் செல்வதாக, சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை, பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், கனமழையை பயன்படுத்தி பாலாற்றில் திறந்து விட்டுள்ளனர்.

இதனால் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றின் தரைப்பாலத்தின் கீழ் பாலாற்று நீர் மலைப்போல் நுரை பொங்கி ஓடுகிறது, இந்நிலையில், பாலாற்றில் தோல் கழிவுநீரை கலப்பதை தடுக்க வேண்டும் என, பாலாற்று படுகையில் உள்ள விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் பாலாற்றை கண்டும் காணாமல் செல்வதாக விவசாயிகளும், பொதுமக்களும் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் பாலாற்றில் தோல் கழிவு நீர் கலப்பதால், பாலாற்று படுக்கையில் உள்ள நிலத்தடி நீர் மட்டம், வெகுவாக பாதிப்படைந்து, பாலாற்று நீர் குடிப்பதற்கு கூட தகுதியற்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்..

Tags

Next Story