விஜயகாந்த் மறைவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்

சூளகிரி பகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தேமுதிக நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி (டிச.28) அன்று காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தியது இந்த நிலையில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த அவர்களின் அலுவலகத்தில் தொடர்ந்து தினமும் பொதுமக்கள், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்த் மறைவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானாவில் பிப்ரவரி 5 தேதி அன்று மதியம் 2 மணியளவில் அவரது புகைப்படத்திற்க்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டு தேமுதிக சார்பில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சூளகிரியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story