இன்டர்நேஷனல் பள்ளியில் மாபெரும் உணவு திருவிழா

இன்டர்நேஷனல் பள்ளியில் மாபெரும் உணவு திருவிழா
இன்டர்நேஷனல் பள்ளியில் மாபெரும் உணவு திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் ,தொழுப்பேடு ஆலம் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் உணவு திருவிழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு ஆலம் இன்டர்நேஷனல் பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள உணவு வகைகள், சிறுதானிய உணவு வகைகள், பாரம்பரிய உணவு வகைகள், மூலிகை உணவு வகைகள் உள்ளிட்டபல்வேறு உணவு வகைகளை மாணவ மாணவிகள் கண்காட்சி அமைத்திருந்தனர். பள்ளியின் முதல்வர் சுமிதா, கண்காட்சியினை தொடக்கி வைத்தார். இதனை அனைத்து மாணவிகளும், பள்ளியின் பெற்றோர்களும் பார்வையிட்டு கண்டு மகிழ்ந்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் உணவு செய்முறைகள் மற்றும் உணவின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

Tags

Next Story