முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நரிக்குறவர்களுக்கு உணவு !

முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நரிக்குறவர்களுக்கு உணவு !

நரிக்குறவர்

நரிக்குறவர் காலனியில் நரிக்குறவர் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் தினம்தோறும் உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கி வருகின்றனர்.
நெல்லை மாநகர பேட்டையில் உள்ள நரிக்குறவர் காலனியில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இங்குள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் தினம்தோறும் உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கி வருகின்றனர்.அந்த வகையில் இன்று (மார்ச் 21) காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் கலந்து கொண்டு உணவினை வழங்கினார்.

Tags

Next Story