குமரியிலிருந்து புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள்

குமரியிலிருந்து புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள்
உணவு பொருட்களை அனுப்பிய கலெக்டர் .

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி முகமை, நாகர்கோவில் மாநகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகளின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய உணவு பொருட்களை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் வாகனம் வாயிலாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், - வெள்ள பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் உதவும் வகையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களான தண்ணீர், பிஸ்கெட், பால் பவுடர் மற்றும் பிரட் ஆகியவற்றினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சென்னைக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள், நல்உள்ளங்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் உதவிட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story