வடலூர்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் அன்னதானம்

வடலூர்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் அன்னதானம்
வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி கடலூர் மாவட்ட தலைவர் ஞானராஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கடலூர் மாவட்டம் மற்றும் நெய்வேலி தொகுதி பொறுப்பாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story