சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம் செய்த உறவினர் மீது வழக்கு பதிவு

ஊத்தங்கரை அருகே 13 வயது சிறுமியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூரைச் சேர்ந்தவர் சின்னராஜ் என்கிற பால்பாண்டி வயது 49. இவர் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது அந்த வீட்டில் தங்கியிருந்த 13 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவார். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பால்பாண்டி சிறுமியிடம் சேர்ந்து ஒரு செல்பி போட்டோ எடுத்துக் கொண்டதாகவும், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது போட்டோவை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி சின்னராஜ் என்கிற பால்பாண்டி சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியிடம் ஆடையில்லாமல் போட்டோ எடுத்து வைத்திருப்பதாக கூறி சிறுமியை கட்டாயப்படுத்தி அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்று வலுகட்டாயமாக கட்டாயப்படுத்தி திருமணம் செய்து உள்ளார். கோவில் பூசாரி உடன் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியுடன் பலமுறை உடலுறவு கொண்டதாகவும், சிறுமி இது குறித்து தாயார், பாட்டி, மாமா ஆகியோரிடம் கூறியதாகவும் அவர்கள் பால்பாண்டி வீட்டில் இருந்து தன்னை மீட்டதாகவும் சின்னராஜ் என்கிற பால்பாண்டி போட்டோவை காட்டி தன்னை மிரட்டியதால் புகார் அளிக்காமல் இருந்ததாகவும் ஊத்தங்கரை போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயனி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story