காட்டுயானைகளால் 10 கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஒசூர் அருகே 4 காட்டுயானைகள், இராயக்கோட்டை சாலையை கடந்து சானமாவு வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதால், 10 கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.
ஒசூர் அருகே போடூர் பள்ளம் பகுதியில் இருந்த 4 காட்டுயானைகள், இராயக்கோட்டை சாலையை கடந்து சானமாவு வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதால், 10 கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த போடூர் பள்ளம் பகுதியில் இருந்த 4 காட்டுயானைகளை வனத்துறையினர் ஒசூர் - இராயக்கோட்டை சாலையை கடந்து சானமாவு வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியிருப்பதால் சானமாவு வனப்பகுதி ஒட்டிய பீர்ஜேப்பள்ளி,ஆளியாளம்,பாத்தக்கோட்டா,இராமாபுரம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் வனப்பகுதிக்கு கால்நடை மேய்ச்சலுக்கு செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாய் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story