இலுப்பூரில் காட்டுத் தீ

இலுப்பூரில் காட்டுத் தீ
தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே காட்டில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அணைத்தனர்.
இலுப்பூர் அருகேயுள்ள முருகக்கோன்பட்டியைச் சேர்ந்த மூக்கையாவுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காட்டில் திடீரென தீப்பிடித்து அப்பகுதி புகை மண்டலமானது. இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடித் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags

Next Story