கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் காட்டு தீ

கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் காட்டு தீ
காட்டு தீ
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட மச்சூர் வனப்பகுதியில் காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது,இதன் காரணமாக புல்வெளிகள், செடி,கொடிகள் காய்ந்து இருப்பதால்,மலைப்பகுதியில் அடிக்க‌டி பகல் மற்றும் இரவு நேரங்களில் தீ ப‌ற்றி எரிந்து வருகிறது, இந்நிலையில் கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட மச்சூர் வனப்பகுதியில் காட்டு தீ ப‌ற்றிய‌துட‌ன் தீயானது கட்டு கடங்காமல் ப‌ல‌ ஏக்க‌ர் ப‌ர‌ப்ப‌ள‌வில் எரிந்து வருகிறது,

இதனால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த தீயை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வ‌ன‌த்துறையின்ர் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் இப்பகுதியில் தீ தொடர்வதால் புகை மண்டலமாக காட்சியளிப்ப‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

Tags

Next Story