கேஸ் அடுப்பை அணைக்க மறந்ததால் தீ விபத்து!

கேஸ் அடுப்பை அணைக்க மறந்ததால் தீ விபத்து!

 தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர் !

கேஸ் அடுப்பை அணைக்க மறந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
புதுகோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அன்னவாசல் அருகே பரம்பூர் சௌராஷ்ட்ரா தெருவை சேர்ந்தவர் கிரிஜா. இவர் டீ போடுவதற்காக கேஸ் அடுப்பை பத்த வைத்துவிட்டு மறந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பாத்திரம் முழுவதும் எரிந்து பின்னர் கேஸ் டியூபிலும் தீபற்றி தெரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிரிஜா இது குறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.

Tags

Next Story