முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தின அமைதி பேரணி

திருச்செங்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதின அமைதி பேரணி நடைபெற்றது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமையில் நடந்த அமைதி ஊர்வலம் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கி 4 ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது, பின்னர் அங்கு அலங்கரிப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு பொன்.சரஸ்வதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர், இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் செல்லப்பன், அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் திருச்செங்கோடு தெற்கு ஒன்றியம் அனிமூர் மோகன், எலச்சிபாளையம் சக்திவேல், மல்லசமுத்திரம் ராஜா, திருச்செங்கோடு நகர துணை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல், நகர அம்மா பேரவை செயலாளர் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், முன்னாள் தொகுதி கழக இணை செயலாளர் முரளிதரன், நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நகரமன்ற உறுப்பினர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட 150 பேர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story